Wednesday, June 3, 2020

#Pandaravadai #பண்டாரவாடை பண்டாரவாடை ஊராட்சி மன்றம் அறிவிப்பு... அன்புள்ள கொண்ட பண்டாரவாடை வாழ் பெருமக்களே.. நமதூரில் தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பாக 1.வாய்க்கால் சரி செய்யும் பணிகள். 2.பேருந்து நிறுத்தத்தில் கிரிமி நாசினி தெளிக்கும் பணிகள்.. 3.குப்பைகளையும் குப்பை மேடுகளையும் சுத்தம் செய்யும் பணிகள். 4.சாலை அமைக்கும் பணிகள். 5.மேலும் பல சாலைகளை சரி செய்யும் திட்டங்கள். 6.நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் இணைப்பு பிரச்சனைகளை சரி செய்யும் பணிகள் மற்றும் திட்டங்கள்.. 7.பசுமை வீடு திட்டம். 8.பி.எம் வீடு திட்டம். 9.சுகாதார குறித்து வளாகம் அமைக்கும் திட்டம். 10.தெரு விளக்குகளை சரி செய்தல் மற்றும் புது மின் விளக்குகளை உருவாக்கும் திட்டங்கள். 11.அரசால் மக்களுக்கு கிடைக்கும் நிதிகளை பெற்று தருதல்.. மேலும் பல நல்ல திட்டங்களை... நமது ஊராட்சியில் தலைவர் மற்றும் து.தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்களும் சரியான முறையில் செய்து வருகிறோம். பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுக்கோள். இனி வரும் காலங்களில் புதிய வீடு கட்டுபவர்கள் தயவுசெய்து அடிமனைக்கு(Basement) மணல் கொட்டி நிரப்ப வேண்டாம்.. செம்மண் கொண்டு நிரப்ப வேண்டுகிறோம்.. காரணம் (ஆற்று மணலை பாதுகாக்க வேண்டியும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியும்) பழைய வீட்டினை இடிக்கும் போது முறையான அனுமதி பெற்று பொது இடத்தை பாதிக்காமல் செய்தல் அவசியம்.. பொது இடங்கள் பாதித்தாலோ வீணாக்கினாலோ (Damage) சரி செய்யும் பொறுப்பினை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் பல நல திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் அனைவர்கள் ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அ.முஹம்மது மஃரூப் ஊராட்சி மன்றம் பண்டாரவாடை 02-06-2020 #Pandaravadai #பண்டாரவாடை Copied & paste By.Pandaravadai Mediä


No comments:

Post a Comment